PBKS Vs KKR: பயங்காட்டிய கொல்கத்தாவை பந்துவீச்சால் பம்ம வைத்த பஞ்சாப் கிங்ஸ். மழையால் முடிவுக்கு வந்த ஆட்டம்

Share

சாம் கரண்

பட மூலாதாரம், BCCI/IPL

80 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறிக்கொண்டிருந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

அணியை சரிவில் இருந்து மீட்டு, பஞ்சாப் வசம் இருந்த வெற்றியை பறிக்க முயன்றபோது விக்கெட்டை பறிகொடுத்தார், அட்டகாசமான ஃபார்மில் திகழ்ந்த ரஸல் .

அதிருப்தியில் ரஸல் கோபத்துடன் கத்தியவாறு மைதானத்தில் இருந்து வெளியேறியதன் மூலம் கொல்கத்தாவின் போராட்டமும் முடிவுக்கு வந்தது. ஆட்டத்தில் மழையும் குறுக்கிட்டதால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது பஞ்சாப் கிங்ஸ்.

அதிரடியாக தொடங்கிய பஞ்சாப் கிங்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் இடையிலான நடப்பு ஐபிஎல் தொடரின் 2வது ஆட்டம் மொஹாலியில் நடைபெற்றது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார் பஞ்சாப் வீரர் பிரப்சிம்ரன் சிங்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com