தோனியும் தொடர்ந்து பதிரனாவின் பந்துவீச்சை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பாராட்டி வந்தார். இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திற்கு பதிரனா குறித்து அறிவுரை எல்லாம் கொடுத்தார் அவர். வளர்ப்பு மகன் போல பதிரனாவை தோனி பார்த்துக்கொள்கிறார் என இணையத்தில் மீம்களும் பறந்தன. இந்நிலையில் மதீஷா பதிரனாவின் குடும்பத்துடன் தோனி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கிறார் அவரது சகோதரி விஷுகா பதிரனா. அதில்,
“இப்படியான விஷயத்தை நாங்கள் கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை” என இந்தச் சந்திப்பு குறித்து உருகியிருக்கிறார் அவர். ஞாயிறு இறுதிப்போட்டியில் ஆடும் சென்னை அணியின் முக்கிய துருப்புச் சீட்டாக பதிரனா இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது!