சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மற்றும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ட்ராவிஸ் ஹெட்டுக்கு அபராதம் விதித்துள்ளது.
பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் போட்டியில் இருவருக்குமிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளது ஐசிசி.
சிராஜ் பயன்படுத்திய வார்த்தைகளுக்காகவும், சைகைகள் செய்ததற்காகவும் அபராதம் விதித்திருக்கிறது ஐசிசி. போட்டிக்காக அவர் பெறும் சம்பளத்தில் 20 சதவீதம் அபராதமாக கட்ட வேண்டும் எனக் கூறியுள்ளனர். இருவர் மீதும் தவறு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவருக்கும் தலா ஒரு டி-மெரிட் புள்ளி வழங்கப்பட்டுள்ளது.