மும்பை இந்தியன்ஸ் அணிக்காக என் சொந்த மண்ணில் விளையாடுவது மிகவும் சிறப்பான ஒரு விஷயம்.
நான் 2010, 2011, 2012 சீசன்களில் இந்த அணியுடன் ஒரு நெட் பவுலராகவும், வளர்ந்து வரும் வீரராகவும் இருந்திருக்கிறேன்.
இங்கே சத்தமில்லாமல் பந்துவீசி என் அடையாளத்தை உருவாக்கினேன். நான் இதே அணியில் தொடர்ந்து இருந்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.
இது என் சொந்த ஊர். இங்கு எனக்கு கிடைக்கும் ஆதரவைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

லக்னோ அணியிலிருந்து என்னை டிரேடிங் செய்து, முதல் போட்டியிலேயே வாய்ப்பளித்த மும்பை இந்தியன்ஸ் குடும்பத்திற்கு எனது நன்றிகள்.
ஒவ்வொரு முறையும் கடினமான போட்டிகளில் விளையாடும்போது நிறைய விமர்சனங்கள் வரும்.
ஆனால், அவற்றுக்கு இடையே நீங்கள் சிறப்பாகச் செயல்படும்போது, மக்கள் அன்பை வெளிப்படுத்துவார்கள்” என்று பேசியிருக்கிறார்.