MI vs GT : ‘தவறான சமயத்தில் உடைந்த சாய் சுதர்சன் – வாஷிங்டன் கூட்டணி!’ – எப்படி வென்றது மும்பை இந்தியன்ஸ்?

Share

‘டெத் ஓவர் மிரட்டல்!’

இப்போது போட்டி சமநிலைக்கு வந்தது. கடைசி 3 ஓவர்களில் குஜராத்துக்கு 45 ரன்கள் தேவை. திவேதியாவும் ரூதர்போர்டும் க்ரீஸில் நின்றனர். பும்ரா வீசிய 18 வது ஓவரில் திவேதியா ஒரு சிக்சரை அடிக்க 9 ரன்கள் வந்தது. 19 வது ஓவரை போல்ட் வீசினார். முதல் பந்திலேயே பெரிய ஷாட்டுக்கு முயன்று ரூதர்போர்டு அவுட் ஆனார். ஷாரூக்கான் உள்ளே வந்தார். ஓவரின் கடைசிப் பந்தை சிக்சரும் ஆக்கினார். கடைசி ஓவரில் குஜராத்துக்கு 24 ரன்கள் தேவை.

ஹர்திக்குக்கே ஓவர் இருந்தது. அஸ்வனி குமாருக்கும் ஓவர் இருந்தது. ஆனாலும் க்ளீசனுக்கே கடைசி ஓவரை கொடுத்தார் ஹர்திக். இது ஒரு கேம்பிளாக தெரிந்தது. ஆனாலும் மும்பைக்கு சாதகமான ரிசல்ட்தான் கிடைத்தது. திவேதியா ஸ்ட்ரைக்கில் இருந்தார். முதல் பந்து ஸ்லோயர் ஒன். ஒரு ரன் மட்டுமே. அடுத்த பந்து ஒயிட் ஆப் ஸ்டம்ப் லைன். ஷாரூக்கான் டாட் ஆக்கினார். அடுத்த பந்தும் அதே லைன். ஆனால், இந்த முறை 2 ரன்கள். கடைசி 3 பந்துகளில் 21 ரன்கல் தேவை. குஜராத்தின் தோல்வி உறுதியானது. உடனே க்ளீஸனுக்கு ஓவரை கட் செய்துவிட்டு கடைசி 3 பந்துகளை அஸ்வனி குமாருக்கு கொடுத்தார் ஹர்திக்.

அவர் ஷாரூக்கானின் விக்கெட்டை எடுத்ததோடு மேற்கொண்டு ரன்னையும் எடுக்கவில்லை. 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வென்றது. சாய் சுதர்சன் – வாஷிங்டன் சுந்தர் பார்ட்னர்ஷிப் உடைபட்ட இடம்தான் பிரச்னையாக மாறியது. அந்த பார்ட்னர்ஷிப்பை உடைத்த பும்ராதான் கேம் சேஞ்சர்.

இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப்புக்கு எதிரான இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டிக்கு மும்பை செல்கிறது. ப்ளே ஆப்ஸில் மும்பை எப்போதுமே ஆபத்தான அணிதான். ஆக இன்னும் என்னவெல்லாம் சம்பவங்களை செய்ய அவர்கள் காத்திருக்கிறார்களோ!

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com