தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர் எல்லையின் கரேகுட்டலு மலைப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் மாவோயிஸ்டுகளைத் தேடிவந்தனர்.
கடந்த சனிக்கிழமை அதிகாலையில் பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த மோதலில் 28 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. அதே நேரம் மாவோயிஸ்டுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பழங்குடியினர்களும், ஆதிவாசி சமூக மக்களும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து எழுகிறது.
இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், “சத்தீஸ்கரின் பஸ்தாரில் மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கைகளின் கீழ் ஆதிவாசி சமூகங்களை குறிவைப்பதை நிறுத்த வேண்டும். நடந்து வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து எனது கவலையை தெரிவித்துக் கொள்கிறேன்.