Liverpool: உயிரிழந்த வீரர் குடும்பத்துக்கு ரூ.140 கோடி; ஒப்பந்த தொகையை அப்படியே வழங்கிய அணி!

Share

லிவர்பூலுடனான ஜோட்டாவின் ஒப்பந்தம் இன்னும் இரண்டு ஆண்டுகள் மீதமிருக்கும் நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கான சம்பள தொகையையும் அவரது குடும்பத்துக்கு அளிப்பதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் அவரது குடும்பத்துக்கு 14 மில்லியன் யூரோ, இந்திய மதிப்பில் 140 கோடி ரூபாய் கிடைக்கும் என செய்திதளங்கள் குறிப்பிட்டுள்ளன.

Liverpool அணி சமீப காலமாக உள்ளூர் மற்றும் ஐரோப்பிய அளவிலான போட்டிகளில் சிறப்பாக செயல்படுவதில் முக்கிய தூணாக செயல்பட்டார் தியாகோ ஜோட்டா.

அவரது இறுதி சடங்கில் மொத்த லிவர்பூல் அணியினரும், முன்னாள் வீரர்களும் கலந்துகொண்டுள்ளனர். மைதானத்தில் அவருக்கு நினைவுச் சின்னம் வைப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com