
Stepup முறை என்றால் என்ன?
இளம் வயதில் குறைந்த தொகையில் எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடங்கி, ஒவ்வோர் ஆண்டும் 5% அல்லது 10% என உயர்த்திக்கொண்டே செல்வதுதான் Stepup முறை.
உதாரணமாக, ரமேஷ் என்பவர் 31-வது வயதில் மாதந்தோறும் ரூ.5,000 என எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யத் தொடங்குகிறார். ஆண்டுதோறும் 10% என முதலீட்டுத் தொகையை உயர்த்துவது அவர் திட்டம்.
அதாவது, முதலாம் ஆண்டில் ரூ.5,000. இரண்டாம் ஆண்டில் ரூ.5,500, மூன்றாம் ஆண்டில் ரூ.6,100, நான்காம் ஆண்டில் ரூ.6,710 என ஒவ்வொரு ஆண்டும் முதலீட்டுத் தொகையை உயர்த்திக்கொண்டே செல்வதுதான் Stepup முறை. இப்படி சேர்த்தால், அடுத்த 30 ஆண்டு காலத்தில் அவர் மொத்த எவ்வளவு பணத்தை சேர்த்திருப்பார்?
ரமேஷ் முதலீடாகக் கட்டிய மொத்த பணம் ரூ.98,69,641
ஆண்டு கூட்டு வட்டி வளர்ச்சியில் 12% லாபம் அடுத்த 30 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்குத் திரும்பக் கிடைக்கும் பணம் ரூ.3,99,28,881.