அவர் வீசிய 6 வது ஓவரில் மட்டும் 17 ரன்களை அடித்தார். டெல்லியில்தான் போட்டி நடந்தது. போட்டி நடந்த இந்த பிட்ச்சில் ஸ்பின்னர்களின் எக்கானமி 6 யைச் சுற்றிதான் இருக்கிறது. ஆக, ஸ்பின்னர்கள் கொஞ்சம் ஆதிக்கம் செலுத்த முடியும். ஆனால், ராகுல் ரஷீத் கானை அடுத்தடுத்து பவுண்டரியாக்கிதான் அரைசதத்தைக் கடந்தார். பார்மில் இருக்கும் சாய் கிஷோரின் ஓவரில் தொடர்ந்து 3 பவுண்டரிக்களை அடித்தார்.
பர்ப்பிள் கேப்பை வைத்திருக்கும் பிரஷித் கிருஷ்ணாவை நின்ற இடத்திலேயே நின்று மணிக்கட்டின் உதவியுடன் அற்புதமாக பேட்டை சுழற்றி சிக்சராக்கினார். மொத்தத்தில் க்ளாஸ் தாண்டவம் ஆடி 60 பந்துகளில் சதத்தைக் கடந்தார். இன்னிங்ஸின் முடிவில் 65 பந்துகளில் 112 ரன்களை எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.
கே.எல்.ராகுல் மாதிரியான வீரர்கள் ஒரு அணிக்கு கிடைக்கப்பெற்ற வரம் என்றே சொல்லலாம்.