KFC style crispy chicken recipes

Share

பிரைட் சிக்கன் எனப்படும் இந்த மொறு மொறு கோழி வறுவல் தான் இப்போது அனைத்து தரப்பினருக்கும் பிடித்தமான உணவாக உள்ளது. அலுவலக பார்ட்டிகளிலோ, நண்பர்களுடன் செல்லும் கெட் டு கெதர்களிலோ இந்த ஃபிரைட் சிக்கன் தான் முக்கிய உணவாக மாறிவிட்டது.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் கூலாக வீட்டிலே உட்கார்ந்து கொண்டு அன்றைய பொழுதை கழிக்க நண்பர்களுடன் சேர்ந்து படம் பார்ப்பதற்காகவே ஒரு பாத்திரம் முழுவதும் பிரைட் சிக்கன்களை ஆர்டர் செய்து போட்டி போட்டுகொண்டு உண்பதை யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள்!

அந்த அளவிற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதற்கு அடிமையாக இருக்கிறார்கள். இதனுடைய சுவையும் அருமையாகவே இருக்கும். ஆனால் இனிமேல் உங்களுக்கு ப்ரைட் சிக்கன் சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் கேஎஃப்சி-க்கோ அல்லது வேறு ஏதேனும் வெளி உணவகங்களிலோ ஆர்டர் செய்யத் தேவையில்லை. உணவகங்களில் கிடைப்பது போலவே அதே சுவையுடனும் அதை விட அதிக தரத்துடனும் வீட்டிலேயே ஃபிரைட் சிக்கன் செய்ய முடியும்.

தேவையான பொருட்கள்:

270 கிராம் சிக்கன்

ஒரு டேபிள் ஸ்பூன் பூண்டு சுவையுள்ள உப்பு

ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்

கருப்பு மிளகு தேவையான அளவு

தண்ணீர் தேவையான அளவு

1 ½ கப் சுத்திகரிக்கப்படாத மைதா மாவு

இரண்டு முட்டைகள்

உப்பு தேவையான அளவு

எண்ணெய் தேவையான அளவு

செய்முறை :

முதலில் அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் சுத்திகரிக்கபடாத மைதா மாவு சேர்த்து அதனுடன் பூண்டு சுவையுள்ள உப்பு, மிளகாய்த்தூள், கருப்பு மிளகு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் முட்டையை ஊற்றி நன்றாக அடித்து கலக்கவும்.

பிறகு அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மீண்டும் கலக்க வேண்டும். அதனுடன் ஏற்கனவே கழுவி வைத்த சிக்கன் துண்டுகள, அடித்து வாய்த்த முட்டையில் கலந்து, அதனை இன்னொரு பாத்திரத்தில் உள்ள மாவு கலவையில் நன்றாக திரட்டி எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஒவ்வொரு சிக்கன் துண்டுகளையும் தனித்தனியாக பிரட்டி எடுத்து அவற்றை தனி பாத்திரத்தில் எடுத்து வைக்க வேண்டும்.

அடுத்த முறை பூரி சுடும்போது ஒரு வாழைப்பழம் சேர்த்துப் பாருங்க… டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்…

கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் தேவையான அளவு விட்டு நன்றாக சூடுபடுத்த வேண்டும். எண்ணெய் சூடாகி அதிலிருந்து குமிழ்கள் வரும் போது ஏற்கனவே தயாராக வைத்திருந்த சிக்கன் துண்டுகளை மெதுவாக எண்ணெயில் போட வேண்டும். அதிகமான அவசரம் இல்லாமல் மிக மெதுவாக மென்மையாக சிக்கனை எண்ணெயில் இட்டு பொரிக்க வேண்டும். சிக்கனை எண்ணெயில் போட்ட பிறகு அதனை கிளறவோ, நகர்த்தவோ கூடாது.

அவ்வாறு செய்தால் சிக்கனில் உள்ள மாவு தனித்தனியாக திரிந்து வராமல் சிக்கன் துண்டுகளோடு ஒட்டிக்கொண்டு நல்லதொரு சுவையைக் கொடுக்கும். இரண்டு நிமிடங்களுக்கு அவற்றை எண்ணெயில் பொறிக்க வேண்டும். சிக்கன் துண்டுகள் பொன்னிறத்திற்கு மாறியவுடன் வாணலியில் இருந்து எடுத்து விடலாம். எண்ணெய் அதிகமாக இருப்பதை விரும்பாதவர்கள், சிக்கனை ஒரு டிஷ்யூ பேப்பரிலோ அல்லது சாதாரண எண்ணெய் வடிக்கும் பாத்திரத்திலேயே சிறிது நேரம் வைக்கலாம். இது உணவகங்களில் கிடைக்கும் அதே சுவையில் அதைவிட அதிகமான தரத்திலும் இருக்கும்.

 

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com