IPL Mega Auction : 'சென்னையில் மீண்டும் சாம் கரண்; வரிசையாக Unsold ஆன வீரர்கள்!' – ஏல அப்டேட்ஸ்!

Share

ஐ.பி.எல் மெகா ஏலம் சவுதியில் இரண்டாம் நாளாக இன்று நடந்து வருகிறது. இன்றைய நாளின் தொடக்கத்திலேயே சென்னை அணி சாம் கரனை ஏலத்தில் எடுத்திருக்கிறது.

Sam Curran

சாம் கரண் கடந்த 2020 மற்றும் 2021 சீசன்களில் சென்னை அணிக்காக ஆடியிருந்தார். அதிரடியாக ஆடக்கூடிய பேட்டர் மற்றும் ஆக்ரோஷமாக வீசக்கூடிய இடதுகை வேகப்பந்து வீச்சாளர் என்பதால் சென்னை அணியிலுமே முக்கிய வீரராக இருந்தார். ரசிகர்களும் செல்லமாக ‘சுட்டிக் குழந்தை’ என்றும் அழைத்திருந்தனர். கடந்த சில சீசன்களாக பஞ்சாப் அணிக்காக ஆடியிருந்தார். அங்கேயும் ஒரு ஆல்ரவுண்டராக நன்றாக செயல்பட்டிருந்தார். அந்த அணிக்கு கேப்டனாகவும் இருந்திருக்கிறார். கடந்த சீசனில் 270 ரன்கள் எடுத்ததோடு 16 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.

சாம் கரனின் இன்னொரு பெரிய பலமான விஷயம், அவரை எந்த ஆர்டரில் வேண்டுமானாலும் இறக்கி Pinch Hitter ஆக பயன்படுத்தலாம். அதனால்தான் இந்த ஏலத்தில் சென்னை அணி சாம் கரணுக்காக முயன்றது. சென்னையும் லக்னோவும் சாம் கரணுக்காக போட்டியிட இந்த ரேஸில் சென்னை முந்திக் கொண்டு 2.40 கோடிக்கு சாம் கரணை வாங்கியது.

SAM CURRAN

இரண்டாம் நாளில் இப்போது வரைக்கும் கேன் வில்லியம்சன், க்ளென் பிலிப்ஸ், ரஹானே, ஷர்துல் தாகூர், மயங்க் அகர்வால், பிரித்திவி ஷா ஆகியோரை எந்த அணியும் வாங்கவில்லை. அதேமாதிரி டூ ப்ளெஸ்சிஸை 2 கோடி ரூபாய்க்கு அதாவது அடிப்படை விலைக்கே டெல்லி வாங்கியிருக்கிறது. வாஷிங்டன் சுந்தரை குஜராத் அணி 3.20 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறது. வேறு சில வீரர்களுடன் ஒப்பிடுகையில் வாஷிங்டன் சுந்தர் இன்னும் பெரிய தொகைக்கு தகுதியானவர்தான்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com