இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் குறித்துப் பேசிய இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சுனில் கவாஸ்கர், “கடந்த சீசனில் கொல்கத்தா அணி கோப்பை வென்றபோது கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்குப் போதிய பாராட்டு கிடைக்கவில்லை.
அனைத்துப் புகழும் வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டது.

அணியின் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றுவது கேப்டனே தவிர, ஆடுகளத்திற்கு வெளியே உட்கார்ந்திருப்பவர் அல்ல.
நடப்பு சீசனில் பஞ்சாப் அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்ற ஸ்ரேயாஸ் ஐயருக்குப் போதிய பாராட்டு கிடைக்கிறது.
ரிக்கி பாண்டிங் இதற்குக் காரணம் என யாரும் கூறவில்லை” என்று கூறியிருக்கிறார்.