பஞ்சாப் கிங்ஸின் சாதனை:
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில், முதல் இன்னிங்ஸில் பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் செய்தது. இதில் 20 ஓவர்கள் முடிவில் 214 ரன்கள் எடுத்தது. ஏற்கனவே, இதே தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் 214 ரன்களும், லக்னோ மற்றும் சி.எஸ்.கே அணிக்கு எதிராக தலா 201 ரன்களும் எடுத்து அசத்தியது. இதன் மூலம், ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 4 போட்டிகளில் 200+ ரன்களை எடுத்த முதல் அணி என்ற பெருமையை பெற்றது, பஞ்சாப் கிங்ஸ் அணி.