உலகக்கோப்பை ஜுரம் சரியாவதற்குள் ஐ.பி.எல் ஜுரம் வந்துவிட்டது. ஐ.பி.எல் 2022-க்கு முழுமையான பெரியதொரு ஏலம் நிகழ்ந்த நிலையில், ஐ.பி.எல் 2023-க்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 23-ம் தேதி கொச்சியில் நடைபெறும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. இதையடுத்து ஐ.பி.எல் அணிகள் அனைத்தும் வீரர்களை விடுவிப்பது, புதிய வீரர்களை மற்ற அணிகளிலிருந்து (Trade Off) வாங்குவது எனப் பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளில் இருந்துவந்தன.
இதையடுத்து இன்று, அனைத்து அணிகளும் எந்தெந்த வீரர்களை ரீட்டெய்ன் செய்கின்றனர், யாரையெல்லாம் விடுவிக்கின்றனர் என்ற தகவலை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர். ஒவ்வொரு அணிகளும் விடுவித்திருக்கும் வீரர்களின் பெயர்கள் இதோ…