இப்போது ரசிகர்களுக்கு இருக்கும் சந்தேகம், நாளையும் மழை பெய்தால் என்னவாகும் என்பதுதான். இன்று போட்டியை நடத்த என்னென்ன சாத்தியக்கூறுகள் எல்லாம் விவாதிக்கப்பட்டதோ அதேதான் நாளையும் நடக்கும். இரவு 9.35 மணிக்கு முன்பு போட்டி தொடங்கப்பட்டால் முழு 20 ஓவர்களும் வீசப்படும். மொத்தமாக, நள்ளிரவு 12.06 வரை கட் ஆஃப் டைம் இருக்கும். அதற்குள் தொடங்கினால் குறைந்தது 5 ஓவர் போட்டியை நடத்த முடியும். அதையும் நடத்த முடியாவிட்டால், சூப்பர் ஓவர் நடத்த முடியுமா என ஆலோசிக்கப்படும். அப்படியும் இல்லை என்றால் புள்ளிப்பட்டியலில் முன்னிலை வகித்த அணியே வெற்றியாளர் என அறிவிக்கப்படும்.