Ind vs Pak: ‘ஜாம்பவான்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திவிட்டோம்!’ – போட்டி ரத்து குறித்து நிர்வாகம் | WCL 2025 | Ind vs Pak | Yuvaraj Singh

Share

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்திய அணி, பாகிஸ்தான் உடனான போட்டியில் அவசியம் விளையாட வேண்டுமா? எனக் கடும் விமர்சனங்கள் எழுந்தன. அதன் பிறகே, இந்திய வீரர்கள் பலரும் இந்தப் போட்டியிலிருந்து விலகினர்.

போட்டியை ரத்து செய்தது குறித்து WCL போட்டி நிர்வாகம், “எங்களின் ஒரே நோக்கம், ரசிகர்களுக்கு நல்ல, மகிழ்ச்சியான தருணங்களை வழங்குவதாகவே இருந்தது. பாகிஸ்தான் ஹாக்கி அணி இந்த ஆண்டு இந்தியாவுக்கு வருவதாக வந்த செய்தியை அறிந்திருந்தோம்.

சமீபத்திய இந்தியா – பாகிஸ்தான் இடையேயான கைப்பந்து போட்டியையும், மற்ற விளையாட்டுகளில் இரு நாடுகளுக்கு இடையிலான சில போட்டிகளையும் பார்த்து, உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு மகிழ்ச்சியான நினைவுகளை உருவாக்கும் பொருட்டு WCL-ல் இந்தியா – பாகிஸ்தான் போட்டியைத் தொடர்ந்து நடத்தலாம் என்று நினைத்தோம்.

WCL About India - Pakistan Match Call Off

WCL About India – Pakistan Match Call Off

ஆனால், இந்தச் செயல்பாட்டில், பலரின் உணர்வுகளைப் புண்படுத்தியிருக்கிறோம். அதற்கு மேலாக, நாங்கள் எதிர்பாராத வகையில், நாட்டிற்கு பெருமை தேடித்தந்த எங்கள் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திவிட்டோம்.

எனவே, இந்தியா – பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம். உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக மீண்டும் மனமார்ந்த மன்னிப்பு கோருகிறோம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com