அதில் கிரண் ரிஜிஜூ, “இந்தப் போட்டியைப் பொறுத்தவரை இதுவொன்றும் இந்தியா, பாகிஸ்தான் இருதரப்பு தொடர் அல்ல.
ஆசிய கோப்பையில் இந்தியா விளையாடவில்லை என்றால், தொடரிலிருந்து இந்தியா வெளியேறிவிடும்.
மேலும், ஒலிம்பிக், உலகக் கோப்பை போன்றவை பாகிஸ்தானுக்கானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும்தான்.
ஒரு நாட்டுடனான பகை காரணமாக நாம் ஒலிம்பிக்கிற்கு செல்லவில்லை என்றால், இழப்பு யாருக்கு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
உங்களின் உணர்வு சரிதான், ஆனால் அந்த உணர்வுக்குப் பின்னால் பகுத்தறிவு சிந்தனை இருக்க வேண்டும்.
ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு, ஆசிய சாம்பியன்ஷிப், உலகக் கோப்பை, ஆசிய கோப்பை போன்றவற்றில் பல நாடுகளும் ஒன்றாக இணைந்து விளையாடுகின்றன.
இங்கு, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தனி விளையாட்டு இல்லை” என்று கூறினார்.
பாகிஸ்தானுக்கெதிரான போட்டியில் இந்திய வீரர்களின் இத்தகிய செயல் குறித்து உங்களின் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடுங்கள்.