IND VS NED: `பந்துவீச்சு ஆப்ஷன்கள் அதிகமாக இருப்பது ஒரு இனிய தலைவலிதான்.’ – கேப்டன் சூர்யா குமார் யாதவ் | SKY speaks about victory against Nederland

Share

துபே பற்றி…

துபே பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்த இன்னிங்ஸ் அவருக்கு கிடைக்க வேண்டிய ஒன்று. நியூசிலாந்துக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் அவர் அருமையாக ஆடினார். அப்போது ஆட்டநாயகன் விருது கை நழுவியது. ஆனால் இன்றைய போட்டியில் மிடில் ஓவர்ஸில் அவர் ஆடிய விதம், அனைவரின் அழுத்தத்தையும் குறைத்தது. இந்த விக்கெட்டில் 190 ரன்கள் என்பது உண்மையிலேயே நல்ல ஸ்கோர்.

‘அனைத்து பெட்டிகளும் டிக் ஆனதா?’ என்று கேட்டால், பெரும்பாலான விஷயங்கள் சரியாக நடந்திருக்கலாம். ஆனாலும், வெற்றி பெற்ற போட்டியில்கூட கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் இருக்கும். நாளை ஓய்வு எடுத்துக்கொண்டு, அதைப் பற்றி குழுவாக பேசுவோம்.

இனிய தலைவலி

பந்துவீச்சு ஆப்ஷன்கள் அதிகமாக இருப்பது ஒரு இனிய தலைவலிதான். மிடில் ஓவர்ஸில் அபிஷேக் சர்மா, ஹார்டிக், துபே என பலர் இருக்கிறார்கள். விக்கெட் எதை கேட்டாலும், அந்த நாளுக்கு ஏற்றார் போல சில ஓவர்கள் போட அவர்கள் உதவுவார்கள்.

என் ஃபார்ம் பற்றிப் பேசினால், அனைத்தும் சரியான திசையில் போகிறது. முக்கியமாக, ஒவ்வொரு பேட்ஸ்மேனும் பங்களிப்பு கொடுக்கிறார்கள். அதுதான் எனக்கு வேண்டும் – சிறிய சிறிய கூட்டணிகள். போட்டி இறுக்கமாக இருக்கும் நேரத்தில் ஒருவர் சிறப்பாக ஆடினாலும், நல்ல ஸ்கோருக்கு மற்றவர்களின் ஆதரவும் அவசியம்.” என்றார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com