IND vs ENG; gill; gautam gambhir; இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் மூன்று அனுபவ வீரர்கள் இல்லாதது அரிய வாய்ப்பு என இந்திய வீரர்களிடம் கம்பீர் கூறியிருக்கிறார்.

Share

புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான இந்திய இளம் படை ஜூன் 20-ம் தேதி முதல் இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது.

ரோஹித், கோலி, அஸ்வின் ஆகிய சீனியர் வீரர்கள் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டதால், அவர்களின் வெற்றிடம் நிச்சயம் இந்திய அணியில் வெளிப்படக்கூடும்.

குறிப்பாக, கோலியின் இடத்தை யார் நிரப்பப்போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இந்த நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், இந்த டெஸ்ட் தொடரை இரண்டு கண்ணோட்டத்தில் பார்க்கலாம் எனக் கூறியிருக்கிறார்.

சுப்மன் கில்

சுப்மன் கில்

அணியினருடன் பேசிய கம்பீர், “இதை நாம் இரண்டு வழிகளில் பார்க்கலாம். அதில் ஒன்று: மூன்று அனுபவ வீரர்கள் (கோலி, ரோஹித், அஸ்வின்) இல்லாமல் நாம் இருக்கிறோம்.

மற்றொன்று, நாட்டுக்காக நாம் சிறப்பாகச் செயல்பட இதுவொரு அரிய வாய்ப்பு.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com