அணியில் கண்டிப்பாக ஒரு பேக்கப் ஸ்பின்னர் இருக்க வேண்டும். தனுஷ் கோடியன், சமீபத்தில் ஆஸ்திரேலிய A அணிக்கு எதிராக விளையாடியிருக்கிறார். இதனால்தான், அணியில் சேர்த்துள்ளோம். அதுமட்டுமின்றி குல்தீப் யாதவ் காயம் காரணமாக அவதிப்படுகிறார்.

அக்சர் படேல், சமீபத்தில்தான், தந்தையானார். இதனால், தனுஷ் கோடியனை சேர்த்துள்ளோம். கடந்தமுறை, ரஞ்சிக் கோப்பையை வெல்ல தனுஷ் கோடியனின் ஆல்-ரவுண்டர் ஆட்டமும் மிகமுக்கிய காரணம். திறமைமிக்க, பார்மில் இருக்கும் அவரை, அணியில் சேர்த்துள்ளோம்’’ எனக் கூறியிருக்கிறார்.