IND v SL: புவி வீசிய 19வது ஓவரில் என்ன பிரச்னை? இந்தியா இறுதிப் போட்டிக்குச் செல்ல வாய்ப்பில்லையா? – Fans were saddened after India’s shocking defeat against Srilanka in the Asia cup

Share

ஐக்கிய அரபு அமீரக மைதானங்களில் ஸ்கோரை டிஃபண்ட் செய்து வெல்வது ரொம்பவே கடினம். சேஸிங் செய்யும் அணிகளே எப்போதும் ஆதிக்கம் செலுத்தும். கடந்த உலகக்கோப்பைத் தொடரிலேயே இதை உணர முடிந்திருக்கும். ஸ்கோரை சேஸ் செய்யும் அணிகளே தொடர்ந்து வென்றதால் போட்டியின் முடிவு ஏறக்குறைய டாஸின் போதே தெரிய வந்திருந்தது. அதே கதைதான் இப்போதும்.

அதுவும் இந்தியாவும் பாகிஸ்தானும் ஹாங்காங்கிற்கு எதிராக ஆடிய போட்டிகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, சேஸிங் செய்யும் அணிக்கே இங்கே வெற்றி வாய்ப்பு அதிகம். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் இந்திய அணி டாஸைத் தோற்று முதலில் பேட் செய்தது. போட்டியை இழந்தது. இலங்கைக்கு எதிரான நேற்றைய போட்டியிலும் டாஸைத் தோற்று முதலில் பேட் செய்தது. போட்டியை இழந்தது.

இலங்கை அணி இந்த ஆண்டில் வென்றிருக்கும் அத்தனை டி20 போட்டிகளிலும் சேஸிங் மட்டுமே செய்திருக்கிறது. ஆக, முதல் பேட்டிங்கை விட சேஸிங்தான் இலங்கைக்கும் விருப்பம்.

இந்த சேஸ் ரெக்கார்டுகளையெல்லாம் வைத்து, இதனால் மட்டுமே இந்திய அணி தோற்றுப்போனது எனும் முடிவுக்கும் வந்துவிட முடியாது. இந்திய அணியின் பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என அத்தனையிலுமே முக்கியமான கட்டங்களில் சில குறைபாடுகள் அப்பட்டமாக வெளிப்பட்டிருந்தன.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com