ஹசன் மஹ்மூத் வீசிய விக்கெட் மெய்டன் ஓவர் ஆட்டத்தின் முக்கியமான திருப்புமுனை.
டஸ்கின் அகமதின் கடைசி ஓவரில் ஆக்கர்மேன் அவுட்டானவுடனே ஆட்டம் முடிந்து விட்டது என்று நினைத்த போது வான் மீக்கெரான் இறுதியில் ஆட்டத்தை தன் அதிரடியின் மூலம் பரபரப்பாக்கினார். இறுதியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் வங்கதேசத்தின் பீல்டிங் சிறப்பாக இருந்தது. அவர்கள் வென்றதற்கு மிக முக்கியமான காரணம் அவர்களின் பீல்டிங் என்றால் அது மிகையாகாது.
ஆனால், இது அவர்களைத் திருப்திபடுத்த கூடிய அளவிற்கான வெற்றி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சௌமியா சர்க்காரை எப்படி ஒரு டெத் பௌலராக பார்க்கிறார்கள் என்று புரியவில்லை. ஆக்கர் மேன் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் ஆட்டத்தின் முடிவு மாறியிருக்கலாம்.
அதுவும் டி20 உலகக்கோப்பையில் ‘சூப்பர் 8, 12’ போன்ற சுற்றுகளில் வங்கதேசம் பெறும் முதல் வெற்றி இதுவாகும். இதற்கு முன்னர் ஆடிய 16 போட்டிகளிலும் தோல்வியை மட்டுமே பெற்றிருந்தனர். ஆயிரம் குறைகள் இருப்பினும் வெற்றி என்பது வெற்றிதான்! அந்தக் குறைகளை அடுத்த போட்டியில் செய்யாமல் இருப்பது வங்கதேச அணியினர் கையில்தான் உள்ளது.