1. கேரட்
2. இஞ்சி
3. கொத்தமல்லி
4. தேங்காய்ப்பால் அல்லது இளநீர்
கேரட்டில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளதால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதற்கும், சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும் உதவுகிறது.
இஞ்சி Anti-inflammatory மற்றும் Antibacterial ஆக செயல்படுவதால் முகத்தில் உள்ள பாக்டீரியா, பரு, ரேஷஸ் போன்றவற்றை சரி செய்ய மிக உதவியாக இருக்கும்.
கொத்தமல்லி சருமத்தில் மெலனினை அதிகப்படுத்த உதவுவதால் இதனையும் சருமப் பராமரிப்புக்காக சேர்த்துக்கொள்வது நல்லது.
இவை மூன்றையும் ஒன்றாக அரைத்து, அதனுடன் தேங்காய்ப்பால் அல்லது இளநீர் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். எளிதாக ஜூஸ் தயாராகிவிடும். இதனை தொடர்ந்து அருந்தி வர, சருமம் மேம்படுவதை நன்கு உணர முடியும். இந்த ஜூஸை வாரத்தில் மூன்று முறையோ, ஃபிரெஷ்ஷாக காய்கறிகள் கிடைத்தால் தினமுமோ எடுத்துக்கொள்ளலாம்.