Health : “ஏ.சி அறையில் இருந்தால் உள்நாக்கில் தொற்று ஏற்படுமா? – Does staying in AC room cause uvula infection?

Share

உள்நாக்கு சதை வளர்ச்சி ஏன் ஏற்படுகிறது?

பிறர் இருமும் போதும் தும்மும் போதும் அவர்களிடமிருந்து கிருமி மற்றவர்களுக்கு பரவுகிறது. அந்த கிருமியானது தொண்டையில் தங்கி, பல்கி பெருகுவதனால் ஏற்படும் வீக்கம் தான் உள்நாக்கு சதை வளர்ச்சி. இது தொண்டையில் ஏற்படும் தொற்றுகளில் ஒன்று. இது ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு சுலபமாக காற்றின் மூலம் பரவக்கூடியது. உள்நாக்கானது இயல்புக்கு அதிகமாக வளர்ந்திருக்கிறது என்றால் தொண்டையில் ஏதோ நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். தவிர, அதிக குளிர்ச்சியான நீர் மற்றும் குளிர் பானங்கள் அருந்துவதாலும், ஏ.சி அறையில் இருப்பதாலும்,‌ ஏ.சி பேருந்து மற்றும் ரயிலில் பயணிப்பதாலும்கூட உள்நாக்கில் தொற்று ஏற்படலாம்.

டாக்டர். அருணாச்சலம்

டாக்டர். அருணாச்சலம்

கை வைத்தியம் மட்டும் போதுமா?

இப்போதும் கிராமப்புறங்களில் உள்நாக்கு சதை வளர்ச்சி ஏற்பட்டிருந்தால் உப்பு நீரைக்கொண்டு வாய் கொப்பளிக்க சொல்வார்கள். இதைவிட மருத்துவரிடம் சென்று ஆன்டிபயாடிக் போட்டுக் கொள்வது நல்லது.

சூடாக அருந்தினாலே சரியாகி விடுமா?

உள்நாக்கு சதை வளர்ச்சி ஏற்படுவதற்கு முன்னால் சிறிதாக வீக்கம் ஏற்படும். அப்போதே வெந்நீர், பால், டீ, காபி போன்றவற்றை சூடாக அருந்தினால் கிருமிகள் இறந்து போவதற்கு வாய்ப்பிருக்கிறது. இதற்கு பிறகும் சரியாகவில்லை என்றால் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற‌வேண்டும். வைரஸ் தொற்றாக இருந்தால் 3 நாட்களில் சரியாகிவிடும். பாக்டீரியாவாக இருந்தால் மருத்துவர் கொடுக்கும் ஆன்டிபயாடிக் சாப்பிட்டால் சரியாகும்.”

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com