18-வது உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் 11 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு சாம்பியன் பட்டதைக் கொண்டு வந்திருக்கிறார் தமிழக வீரர் குகேஷ். இறுதிப் போட்டியில் சீனாவின் டிங் லிரனை வீழ்த்தி தனது 18-வது வயதில் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கும் குகேஷ், இளம் உலக செஸ் சாம்பியன் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார். இதுமட்டுமல்லாமல், சர்வதேச செஸ் கூட்டமைப்பான FIDE குகேஷுக்கு ரூ. 11.45 கோடி பரிசுத்தொகையையும் அறிவித்திருக்கிறது.


இந்த நிலையில், FIDE க்கு அளித்த சிறப்பு நேர்காணலில் தனது பெற்றோர்களால்தான் இந்த வெற்றி சாத்தியமானது எனத் தெரிவித்திருக்கும் குகேஷ், “நான் செஸ் விளையாடத் தொடங்கியபோது, குடும்பமாக நாங்கள் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. என் பெற்றோர்கள் நிறைய தியாகம் செய்தார்கள். பொருளாதார ரீதியாக நிறைய கஷ்டங்களை எதிர்கொண்டனர். ஆனால், இன்று நாங்கள் ஒரு நல்ல நிலைமையில் இருக்கிறோம். இனிமேல், இது போன்ற கஷ்டங்கள் எதுவும் இருக்காது.