வெற்றிக்குப் பிறகு பேசிய லக்னோ கேப்டன் பண்ட், “நிச்சயமாக சந்தோஷம். ஒரு அணியாக நாங்கள் நல்ல கிரிக்கெட் ஆட முடியும் என்பதைக் காட்டியிருக்கிறோம்.
ஒரு கட்டத்தில், பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதிபெறும் வாய்ப்பு எங்களுக்கு இருந்தது.
ஆனால், இவையெல்லாம் விளையாட்டின் ஓர் அங்கம்தான். எனவே, அதிலிருந்து கற்றுக்கொண்டு நன்றாக வரவேண்டும்.
இன்று ஷாருக்கான் பேட்டிங் செய்த விதம், நிச்சயமாக பின்வரிசையில் (குஜராத் டைட்டன்ஸ்) நம்பிக்கையளித்திருக்கும்.
இந்தப்பக்கம், மார்ஷ், பூரன் என ஒட்டுமொத்த பேட்டிங் யூனிட்டும் விளையாடிய விதம் நன்றாக இருந்தது.
ஃபீல்டிங்கில் நாங்கள் சில தவறுகளைச் செய்தோம். அவற்றிலிருந்து கற்றுக்கொண்டு முன்னோக்கிச் செல்லவேண்டும்.” என்று கூறினார்.