இது குறித்து பார்முலாவின் இணை இயக்குநரான ஆல்பர்டோ லாங்கோ கூறுகையில், “ABB FIA Formula E-வின் 9-வது சீஸனிற்காகத் தேதிகளை தற்போது அறிவித்துவிட்டோம். இது வரையிலான ஃபார்முலா இ போட்டிகளில் இதுதான் அதிக செலவில் நடைபெறுகிற போட்டி. ஹைதராபாத், சா பாலோ ஆகிய இரு நகரங்களில் இம்முறைக்கான போட்டிகள் நடைபெறவிருக்கிறன. மேலும் கேப் டவுன் நகரில் இவ்வருடத்திற்கான போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறோம். உலகிலேயே முதல் கார்பன் அற்ற ரேஸ் இதுவே” என்றார் அவர்.
மேலும் ஃபார்முலா E தலைமை அதிகாரி ஜெமி ரெய்கல் பேசுகையில், “மெக்சிகோவில் தொடங்கி லண்டனில் முடிவடையும் இப்போட்டியில் நீண்ட நாள்களுக்குப் பிறகு வருகை புரிந்திருக்கிறது மாசிராட்டி (Maserati). உலக ரசிகர்களிடையே இப்போட்டி பெரும் வரவேற்பை பெரும் என்று நம்புகிறோம். பல்வேறு தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஜென் 3 வகை கார்கள் இப்போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதுவும் கார் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறோம்” என்று கூறினார்.