Fengal Cyclone: புதுச்சேரியில் வரலாறு காணாத மழை – மக்கள் கூறுவது என்ன?

Share

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மழை பெய்துள்ளது.
படக்குறிப்பு, புதுச்சேரியில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மழை பெய்துள்ளது

புதுச்சேரி அருகே ஃபெஞ்சல் புயல், சூறாவளிக் காற்றுடன் நேற்று (நவ. 30) இரவு 10.30 முதல் 11.30 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் கரையைக் கடந்ததாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையைக் கடக்கும்போது 70-80 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. அவ்வப்போது 90 கி.மீ வேகத்திலும் காற்று வீசியது.

“புதுச்சேரியில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மழை நேற்று பெய்துள்ளது. இதற்கு முன்பு 2004ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி 21 சென்டிமீட்டர் மழை பெய்த நிலையில் நேற்று 46 சென்டிமீட்டர் பெய்துள்ளது”, என, வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் வரலாறு காணாத மழை ஏற்பட்டுள்ள நிலையில், அரசின் நிவாரண பணிகளில் குறைகள் உள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com