என் வயது 54. இந்த வயதுக்குப் பிறகும் தாம்பத்திய உறவின் போது நான் பாதுகாப்பாக இருக்க வேண்டுமா? கருத்தடை முறையைப் பின்பற்ற வேண்டுமா?
– சுப்பு (விகடன் இணையத்திலிருந்து)

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, பேராசிரியரும் மகப்பேறு மருத்துவருமான ஹெப்ஸிபா கிருபாமணி.
“பொதுவாக பெண்களுக்கு 40 வயதுக்கு மேல் கருத்தரிக்கும் வாய்ப்பானது வெறும் 5 சதவிகிதம்தான் இருக்கும். இந்தியப் பெண்களுக்கு சராசரியாக 46.5 வயதில் பெரும்பாலும் மாதவிடாய் நின்றுவிடுகிறது. உங்கள் விஷயத்தில் நீங்கள் மெனோபாஸை அடைந்துவிட்டீர்களா என்ற விவரம் இல்லை. இந்த வயதில் பெரும்பாலான பெண்கள் மெனோபாஸ் நிலையை அடைந்திருப்பார்கள்.