Doctor Vikatan: வெயிலில் வெளியே சென்றுவிட்டு வந்ததும் அல்லது உடற்பயிற்சி செய்ததும் வியர்வை நீங்குவதற்கு உடனே குளிக்க நினைப்போம். ஆனால் வியர்வையோடு குளிக்கக்கூடாது என்கிறார்களே… அது உண்மையா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா
சூழல் மாசுள்ள வெளியிடங்களுக்குச் சென்றுவிட்டு வந்த உடனேயோ, உடற்பயிற்சியோ, வேறு வேலைகளோ செய்துவிட்டு வந்த பிறகோ வியர்வையோடு அப்படியே இருப்பது மிகவும் தவறு. உடனடியாகக் குளிக்க வேண்டியது மிக முக்கியம்.
வியர்வையோடு சருமத்தில் பாக்டீரியா நீண்ட நேரம் இருந்தால், அது பல்கிப் பெருக வாய்ப்புகள் அதிகம். அதன் காரணமாக உடலில் கெட்ட வாடை, இன்ஃபெக்ஷன் போன்றவை ஏற்படலாம். எனவே உடலில் வியர்வை தங்காமல் பார்த்துக்கொள்வதுதான் சரியானது.