Doctor Vikatan: என் வயது 32. கடந்த சில வருடங்களாக மலம் கழிக்கும்போது ரத்தமும் சேர்ந்து வெளியேறுகிறது. இதை மூலநோய் என எடுத்துக்கொள்வதா? சிலர் இது புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம் என்று பயமுறுத்துகிறார்கள். அதற்கு வாய்ப்புண்டா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமார்.
மூலநோய் என்பது ஆசனவாய்க்கு வெளியே வரும் ஒரு பாதிப்பு. மூலநோய் பாதிப்பின் காரணமாகவும் மலம் கழிக்கும்போது ரத்தம் வெளியேறலாம். சிலருக்கு குடலில் புற்றுநோய் இருந்தாலும் மலம் கழிக்கும்போது ரத்தம் வெளியேறலாம்.
எனவே நீங்கள் கொலோனோஸ்கோப்பி என்ற பரிசோதனையைச் செய்துபார்த்தால் குடலில் புற்றுநோய் பாதிப்பு இருக்கிறதா, இல்லையா என்பது உறுதியாகும்.