அதுவே பக்கவாதம் வந்தவர்களுக்கு ஒரு பக்கம் செயலிழந்திருக்கும். அதனால் அவர்களுக்கு ஒரு பக்கம் குரல்நாண் வேலை செய்யாது. அதனால் அவர்கள் சாப்பிடும்போது எப்போதுமே உணவுத்துகளோ, தண்ணீரோ நுரையீரலுக்குள் போய், அங்கே இன்ஃபெக்ஷனை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு.
மற்றபடி ஒருமுறை புரையேறி, அதனால் உயிர் போவது என்பது மிகவும் அபூர்வம். பெரிய உணவுத்துகளோ, வேறெதுவுமோ போய் உணவுக்குழாயை அடைத்தால்தான் அப்படி நடக்கக்கூடும். உணவுத்துகளோ, தண்ணீரோ மூச்சுக்குழாயின்மேல் படும்போது உடனே அதை மூடுவதற்கான பாதுகாப்புத் தன்மை அதற்கு இயல்பிலேயே இருப்பதால் தானாக மூடிவிடும். அப்படி மூடிக்கொள்ளும்போது சில நொடிகளுக்கு மூச்சு விட முடியாமல் போகலாம்.
இந்நிலையில் ஏற்கெனவே உடல்நலம் பாதிக்கப்பட்ட நபராக இருக்கும்பட்சத்தில் அவருக்கு இது ஆபத்தாக மாறி, உயிர் போகலாம். உங்கள் நண்பர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருந்த நோயாளி என்பதால்தான் இப்படி நிகழ்ந்திருக்கும். மற்றபடி எல்லோருக்கும் இப்படி ஆக வாய்ப்பில்லை.
புரையேறும்போது ஒன்றுமே செய்யவேண்டாம். ரிலாக்ஸ்டாக மூச்சுவிட்டபடி இருந்தால் போதும். தலையில் தட்டுவது, குடிக்கவோ, சாப்பிடவோ எதையாவது கொடுப்பது போன்றவற்றைத் தவிர்ப்பதுதான் சரியானது. ரிலாக்ஸ் ஆனதும் நிலை தானாகச் சீராகிவிடும். அதன்பிறகு ஐந்து, பத்து நிமிடங்கள் கழித்து தண்ணீர் குடிக்கலாம், சாப்பிடலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.