பிறந்த குழந்தைகளுக்கு சரியான அளவுள்ள, தரமான டயாப்பர்களை முறையாகப் பயன்படுத்தலாம். தற்போது கிடைக்கும் டயாப்பர்கள் சிறுநீர் மற்றும் கழிவுகளை நன்கு உறிஞ்சும் திறன் உடையவாக இருக்கின்றன.
ஈரத்தால் ஏற்படும் அவதிகளைத் தவிர்த்து, குழந்தைகள் சிரமமின்றி நன்கு உறங்குவதற்கு இந்த டயாப்பர்கள் நிச்சயம் உதவும் என்பதில் சந்தேகமில்லை. குழந்தைக்கு ஒருமுறை டயாப்பர் அணிவித்தால் அதை அடுத்த மூன்று மணி நேரத்துக்கு மாற்றத் தேவையில்லை.
பெற்றோருக்கும் அடிக்கடி துணி மாற்றுவது, துவைப்பது போன்ற சிரமங்கள் இதனால் தவிர்க்கப்படுகின்றன.