அதிகபட்சமாக இரவு 10 மணிக்கு தூங்கிவிட வேண்டும். அந்த நேரத்தில்தான் நம் உடல் உறுப்புகள் தம்மைத் தாமே பழுதுபார்த்துக்கொள்ளும் வேலைகளைச் செய்யும். நம் உடலியல் கடிகாரம் (சர்கேடியன் ரிதம்) அப்படித்தான் இயங்கி பழகியிருக்கும். கண்ட நேரத்தில் தூங்கி, விழிக்கும்போது உடலியல் கடிகார சுழற்சி குழப்பமடையும். அதன் விளைவாக உடல் இயக்கங்களில் மாறுபாடு தெரியும்.
எனவே தவிர்க்கவே முடியாத தருணங்களில் பகல் வேளைகளில் குட்டித்தூக்கம் போடலாம். அது இரண்டு, மூன்று மணி நேரமாக நீளும்போது நிச்சயம் நல்லதல்ல.இரவில் முறையான தூக்கம் வேண்டுவோர், தூங்கச் செல்வதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாகவே காபி, டீ, சோடா போன்றவற்றைக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். 2 மணி நேரத்துக்கு முன்பாகவே இரவு உணவை முடித்துக்கொள்ள வேண்டும். கம்ப்யூட்டர், மொபைல் போன்றவற்றின் உபயோகத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.