Doctor Vikatan: சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது கூட்டத்தில் சிலர் பயன்படுத்தும் நறுமணப் பொருள்கள், என் மூக்கைத் துளைத்து மயக்க நிலையை ஏற்படுத்துகின்றன. வண்டியில் எனக்கு முன்பாகச் செல்பவர்களின் வாசனையும் என்னைத் தடுமாற வைக்கிறது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு உண்டா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, காது-மூக்கு- தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ்.
அதிக வாசனை இருக்கும் பகுதிகளில், நறுமணமாக இருந்தாலும் சரி, கெட்ட வாடையாக இருந்தாலும் சரி, ஒருவித அசௌகர்யம் ஏற்படுவதை நாம் அனைவருமே உணர்ந்திருப்போம். அது போல் இல்லாமல், மிதமான வாசனை இருக்கும் பகுதிகளில்கூட, தடுமாற்றமோ, மயக்கம் வருவது போலவோ உணர்ந்தால் அது நார்மல் கிடையாது.