மற்றபடி வெளியில் உடல் சூடாக இருப்பதாக உணர்வதெல்லாம் காய்ச்சலில் அடங்காது. வெளியில் வெப்பநிலை குளிர்ச்சியாக இருந்தால் உடல் சூடாக இருப்பது போலத் தோன்றும். அதுவே வெளியில் சூடாக இருந்தால் உடல் குளிர்ச்சியாகத் தெரியலாம். எனவே அதையெல்லாம் காய்ச்சல் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.
குழந்தைக்குக் காய்ச்சல் வந்தால் கம்பளியில் சுற்றி வைக்கக்கூடாது. முதல் வேலையாக உடைகளை அகற்றிவிட்டு தண்ணீரில் நனைத்துப் பிழிந்த டவலால் உடலைத் துடைத்துவிட்டால் உடனே காய்ச்சல் குறையும்.
பெரியவர்களுக்கு வியர்வை வந்தாலே காய்ச்சல் குறையும். வியர்க்க அனுமதிக்கும்படி உடைகளைத் தளர்த்தி, அது ஆவியாக இடம்தர வேண்டும். குழந்தைகளுக்கு உடலைப் போர்த்திவைத்தால் காய்ச்சல் ஏறி, ஏறி இறங்கும். அதனால் அப்படிச் செய்யக்கூடாது.
மூன்று நாள்களுக்கு மேலும் காய்ச்சல் தொடர்ந்தால் மருத்துவரிடம் செல்ல வேண்டும். சுய மருத்துவம் செய்யாதீர்கள். காய்ச்சலுடன் மூச்சுத்திணறல், வாந்தி, பேதி இருந்தால் மூன்று நாள்கள் வரை காத்திருக்க வேண்டாம். உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.