சமைத்த உணவை காலையில் எடுத்துக் கொள்ளும் சூழல், நேரம் இல்லாதவர்கள் நம்மில் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் ஒரு கைப்பிடி அளவுக்கு பாதாம், அக்ரூட், பேரீச்சம் பழம், உலர் திராட்சை போன்றவற்றுடன் ஏதேனும் ஒரு பழ ஸ்மூத்தி எடுத்துக் கொள்ளலாம்.
ஜூஸுடன் ஒப்பிடும்போது ஸ்மூத்தி ஆரோக்கியமானது. ஜூஸில் நார்ச்சத்து இருக்காது. அதாவது ஜூஸ் தயாரிக்கும்போது அதை வடிகட்டி, நார்ச்சத்தை குப்பையில் வீசுகிறோம். அந்த ஜூஸில் சத்துகள் பெரிதாக இருக்காது. ஆனால், ஸ்மூத்தி என்பது பழத்தை அரைத்து, வடிகட்டாமல் அப்படியே குடிப்பது.
ஸ்மூத்தியிலேயேகூட உலர் பழங்களைச் சேர்த்துக் குடிக்கலாம். அதில் வைட்டமின்கள், தாதுச்சத்துகள், நார்ச்சத்து என எல்லாம் இருப்பதால் காலை உணவைத் தவிர்க்கும் பழக்கம் உள்ளோர், ஸ்மூத்தி எடுத்துக்கொள்வதை வழக்கமாக்கிக்கொள்ளலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.