Doctor Vikatan: அதிக சத்தத்தைக் கேட்டால் தலை வலிக்கிறது.. தவிர்க்க முடியுமா?

Share

சரி செய்ய முடியாத காரணங்களால் ஏற்படும் காது கேளாமைக்கு காதுகேட்க உதவும் கருவிகள் (hearing aid) தீர்வாக அமையும். காது கேளாமை பிரச்னையைச் சரி செய்தால்  ஹைப்பர்அக்யூசிஸ்  பிரச்னையும் பெரும்பாலும் சரியாகிவிடும்.
காதில் தொந்தரவு இல்லாமல் வெறும் மன ரீதியான பிரச்னைகளாலும்  ஹைப்பர்அக்யூசிஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

இள வயதினர், காது கேட்கும் திறனைப் பரிசோதிக்கும் ஆடியாலஜி (audiology) பரிசோதனையில் நார்மல் என வந்தவர்கள்   போன்றோரெல்லாம், சாதாரண சத்தத்தைக்கூட தாங்க முடியவில்லை என்று சொல்பவர்களுக்கு மனப்பதற்றம், ஸ்ட்ரெஸ் போன்ற மன ரீதியான பிரச்னைகள் இருக்க வாய்ப்பு உண்டு.

சாதாரண சத்தத்தைக்கூட தாங்க முடியவில்லை..

சாதாரண சத்தத்தைக்கூட தாங்க முடியவில்லை..
freepik

உங்களுக்கு 60 வயது என்கிறீர்கள். எனவே,  உங்களுக்கு வயதின் காரணமாக ஏற்படும் காது கேளாமை பாதித்திருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, நீங்கள் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவரை அணுகி,  சிகிச்சை எடுக்கலாம்.
இதுவரை சொன்னதெல்லாம், சாதாரண சத்தத்தைக்கூட தாங்க முடியாமல் போவது பற்றி. ஆனால், அதிக சத்தத்தை  நாள்பட கேட்க நேரிட்டால், காது கேட்கும் திறன் பாதிக்கும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதைத் தவிர்ப்பதற்கான வழிகளைப் பின்பற்றுங்கள். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com