இவர்களைப் பரிசோதித்துவிட்டு, நெஞ்சுவலிக்கு ஹார்ட் அட்டாக் காரணமில்லை என்பதை இதயநோய் மருத்துவர் உறுதிசெய்த பிறகுதான் அது அமிலச்சுரப்பின் காரணமாக வந்தது என்பதை ஏற்றுக்கொள்வார்கள். இந்தப் பிரச்னை உள்ளவர்கள் அவ்வப்போது வலி வரும்போது மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொள்வது, அப்போதைக்கு தற்காலிக நிவாரணம் பெறுவது என்று இருக்கக்கூடாது. வாழ்க்கை முறையில் மாற்றங்களைப் பின்பற்ற வேண்டும்.
சரியான நேரத்துக்குச் சாப்பிடுவது, சரிவிகித உணவுகளைச் சாப்பிடுவது, உடற்பயிற்சி, சிகரெட், மதுப்பழக்கங்களைத் தவிர்ப்பது, வெளி உணவுகளை அதிகம் சாப்பிடாமல் இருப்பது என ஆரோக்கியமான லைஃப்ஸ்டைலின் மூலம் இந்தப் பிரச்னையிலிருந்து மீளலாம். இது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதல்ல என்பதால் கவலை வேண்டாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.