தீவிரம் குறைந்ததும் மறுபடி இன்ஹேலர் பயன்படுத்த அறிவுறுத்துவோம். உடனடி நிவாரணம் கிடைக்கிறது என்பதற்காக நரம்பில் செலுத்தும் ஊசி மருந்தை அடிக்கடி எடுத்துக்கொள்ளக்கூடாது. அதில் செலுத்தப்படும் மருந்தின் வீரியம் அதிகமாக இருக்கும். நேரடியாக ரத்தத்தில் செலுத்தப்படுவதால் பாதிப்புகளும் அதிகமிருக்கும்.
நோயாளி அடிக்கடி மருத்துவமனைக்கு வருவதைத் தவிர்ப்பது, அவசர சிகிச்சைக்கு வருவதைத் தவிர்ப்பது, இயல்பான வாழ்க்கையை வாழச் செய்வது… இவைதான் ஆஸ்துமா சிகிச்சையின் நோக்கங்கள். அந்த வகையில் நரம்புவழி ஊசி மருந்துகள் பாதுகாப்பானவை அல்ல, இன்ஹேலர்தான் பாதுகாப்பானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.