ஐ.பி.எல் இந்த லீக் சுற்று இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இதுவரை 59 போட்டிகள் நடந்து முடிந்திருக்கிறது. இன்னும் 11 லீக் போட்டிகள் மட்டுமே மீதமிருக்கின்றன.
கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியை யாஷஸ்வியின் அதிரடியால் மிரட்டலாக வென்றுவிட்டு ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் இப்படி பேசியிருந்தார். ராஜஸ்தானுக்கும் சரி பெங்களூருவுக்கும் சரி இது ஒரு காலிறுதிப்போட்டிதான்.
ராஜஸ்தான் அணி இதுவரை 12 போட்டிகளில் ஆடி 6 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது. அதேநேரத்தில் பெங்களூர் அணி 11 போட்டிகளில் ஆடி 5 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது.
10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது. குறைந்தபட்சமாக 8 போட்டிகளிலாவது வென்றால்தான் கொஞ்சம் சௌகரியமாக ப்ளே ஆப்ஸூக்கு முன்னேற முடியும். அதனடிப்படையில் பார்த்தால் ராஜஸ்தான் எஞ்சியிருக்கும் இரண்டு போட்டிகளையும் வெல்ல வேண்டும். பெங்களூர் எஞ்சியிருக்கும் 3 போட்டிகளையும் வெல்ல வேண்டும். இப்படி ஒரு சூழலில்தான் இன்று ஜெய்ப்பூரில் மோதவிருக்கின்றன.