தமிழக அமைச்சரவையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்புதான் அமைச்சரவை மாற்றம் நடந்திருந்தது.
பணமோசடி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்பால், செந்தில் பாலாஜி கவனித்துவந்த மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை முத்துசாமிக்கு மாற்றப்பட்டது.

அதேபோல், சர்ச்சைக்குரிய பேச்சு சம்பவத்துக்குப் பிறகு பொன்முடியின் வனத்துறை இலாகா, ராஜகண்ணப்பனுக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில், திமுக பொதுச் செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன் வசமிருந்த கனிம வளத்துறை இலாகா, அமைச்சர் ரகுபதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

அதேபோல், ரகுபதியிடமிருந்த சட்டத்துறை துரைமுருகனுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இந்த அமைச்சரவை மாற்றம் குறித்து அதிகாரபூர்வ அறிக்கையை ஆளுநர் மாளிகை வெளியிட்டிருக்கிறது.