ESPN Cricinfo-ல் பேசிய சஞ்சய் பங்கர், “43 வயதில் இத்தகைய போட்டி நிறைந்த சூழலில் விளையாடுவது கடினம்.
இப்படியான சூழலைக்கூட விடுங்கள், இந்த வயதில் நீங்கள் லோக்கல் கிரிக்கெட் ஆடினால்கூட அது உடம்புக்கு எவ்வளவு கடினமாக இருக்கும் என்பது தெரியும். இதெல்லாம், தோனியைப் பொறுத்தது.
ஆனால், நான் தோனியாக இருந்தால், இதுவே போதும் என்று கூறுவேன். எனக்கு என்ன வேண்டுமோ அதை நான் விளையாடிவிட்டேன்.

அணியின் நலன்தான் நோக்கமாக இருந்தால், உங்களுக்கே தெரியும் விலக வேண்டும். அதற்கு அனுமதிக்க வேண்டும்.
அங்கு இருப்பதன் மூலம், மாற்றம் வேகமாக நடக்கும் என்று நினைத்தால் ஒருபோதும் அது சிறந்த நேரமாக கிடையாது.
அதற்கு, இப்போது வெளியேறினாலும் அணி தானாகவே வளரும் என்ற உண்மையுடன் நீங்கள் நிம்மதியாக இருக்கலாம்.
இதற்கு வருடம் கூட ஆகலாம். ஆனால், முழு சுழற்சிக்கும் நான் அங்கு இருக்கப் போவதில்லை. தோனியின் நிலைமையை நான் அப்படித்தான் பார்க்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.