கடந்த மூன்று ஆண்டுகளில் தோனியின் ஓய்வு அறிவிப்பு சார்ந்து இத்தனை விஷயங்களை கடந்து வந்திருக்கிறோம். தோனியின் லாஜிக்படி தோனி இந்த சீசனோடு ஓய்வுபெற வேண்டும். ஆனால், அப்படி ஓய்வு பெற்றுவிடுவாரா என்பதை 100% உறுதியாக யாராலும் கூற முடியாது. தோனியாலுமேகூட கூற முடியுமா என தெரியவில்லை. ஒருவேளை இந்த முறை சிஎஸ்கே கோப்பையை வென்றுவிட்டால் அந்த உற்சாகத்தோடே தோனி விடைபெறக்கூடும். இல்லையெனில் இன்னும் ஒரு சீசன் மட்டும் கடந்துவிட்டால் அடுத்து ஒரு மெகா ஏலமோ அல்லது வீரர்களை களைத்து மாற்ற ஏலம் போன்ற வேறெதோ ஒன்று நடக்கும் அத்தோடு ஓய்வு பெறலாம் என்று கூட நினைக்கலாம். எல்லாவற்றுக்கும் மேல் தோனி ஒரு வீரராக மட்டுமே பங்களிப்பை நல்கிய இந்திய அணியிலிருந்து அவர் நினைத்த மாத்திரத்தில் அவரால் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுவிட்டு ஒதுங்க முடிந்தது. ஆனால்,
தோனி ஓய்வு அறிவிப்பாரா? என்பது குறித்த உங்கள் கருத்தை கமென்ட் செய்யுங்கள்!