CSK : ருத்துராஜ் பிடிவாதத்துக்கு CSK அணி தோற்கலாமா? – தவறுகள் நடப்பது எங்கே?

Share

‘இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடையாது!’

பேட்டிங் ஆர்டரில் மொமண்டம் கிடைக்கவில்லை மொமண்டம் கிடைக்கவில்லை என ஒவ்வொரு போட்டியிலும் புலம்புகிறார். விஜய் சங்கர் மாதிரியான பேட்டரை வைத்துக்கொண்டு எப்படி இப்படி பேசுகிறார் என தெரியவில்லை. அவர் ஒரு ஹார்ட் ஹிட்டர் கிடையாது. டாப் 3 இல் யாருமே ஹார்ட் ஹிட்டர் கிடையாது. நம்பர் 4/5 இல் வரும் விஜய் சங்கரும் ஹார்ட் ஹிட்டர் கிடையாது. எனில், அவர் எதற்கு அணியில்?

200+ சேஸிங்கில் அவரை இறக்குவதுகூட இல்லையே. அப்படியிருக்க அந்த இடத்தில் இண்டண்டோடு அட்டாக்கிங்காக ஆடக் கூடிய ஷேக் ரஷீத், வன்ஸ் பேடி போன்ற இளம் வீரர்களை இறக்கலாமே? நாங்கள் அனுபவ வீரர்களைத்தான் நம்புவோம் என ப்ளெம்மிங் சொல்கிறார். இதே ருத்துராஜ் என்ன அனுபவ வீரராக அணிக்குள் வந்தவாரா? ஸ்பார்க் இல்லை என தோனியால் தூற்றப்பட்டு ஓரமாக உட்கார வைக்கப்பட்டவர். சூழலினால் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி உயர்ந்துவிட்டார்.

அவருக்குக் கிடைத்த வாய்ப்பை அவர் ஏன் மற்ற இளம் வீரர்களுக்குக் கொடுக்க தயங்குகிறார்?

செய்வதெல்லாம் தவறு எனத் தெரிந்தும் அதை ஒத்துக்கொள்ள மனமில்லாமல், மீண்டும் மீண்டும் அதே தவறுகளை ருத்துராஜ் செய்து கொண்டிருக்கிறார். இந்த பிடிவாதத்தை அவர் கைவிடாமல் சென்னை அணியால் வெல்லவே முடியாது.

இதைத் தவிர வேறு என்ன மாற்றங்களை CSK செய்ய வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதைக் கமென்ட்டில் தெரிவிக்கவும்

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com