ஐபிஎல் 2026 தொடரில் முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி மற்றும் தென்னாப்பிரிக்க இளம் வீரர் டெவால்ட் ப்ரேவிஸ் இருவரும் காயத்திலிருந்து மீண்டு, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் களமிறங்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரும்ப வருகிறார் தோனி?
ஐந்து முறை சிஎஸ்கே-வுக்கு கோப்பை வென்று தந்த கேப்டன் தோனி, தசைப்பிடிப்பு காரணமாக இந்தத் தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் விளையாடவில்லை.
அவர் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானாலும், அணி நிர்வாகம் அவரது வருகையை அவசரப்படுத்த விரும்பவில்லை. இந்நிலையில், தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, தோனிக்கு அடுத்த ஓரிரு நாட்களில் உடற்தகுதி தேர்வு நடத்தப்பட உள்ளது. அதில் அவர் தேர்ச்சி பெற்றால், சனிக்கிழமை டெல்லிக்கு எதிராக நடக்கும் போட்டியில் நிச்சயம் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.