நேபாளத்தில் நாடாளுமன்ற கட்டடத்துக்கும் பிரதமர் வீட்டுக்கும் தீ வைப்பு – 12 மணி நேரத்தில் என்ன நடந்தது?
பட மூலாதாரம், EPAபடக்குறிப்பு, நாடாளுமன்ற கட்டடம் மற்றும் சிங் தர்பார் எனும் அரண்மனைக்கு போராட்டக்காரர்கள் செவ்வாய்கிழமை தீ வைத்தனர். சிங் தர்பாரில் பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் உள்ளன 9 செப்டெம்பர் 2025, 13:41 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்காத்மாண்டுவில் உள்ள நேபாள நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர். கட்டடத்தின் ஒரு பகுதியிலிருந்து புகை தொடர்ந்து எழுகிறது.கட்டட வளாகத்தைச் சுற்றி மோட்டார் சைக்கிள்கள் சுற்றி வருகின்றன. சிலர் தோட்டத்திலிருந்து தோண்டியெடுக்கப்பட்ட செடிகளையும், கட்டடத்தின் உட்புறத்திலிருந்து…









