தொடர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பு; திருவாடானை தொகுதியில் ஓபிஎஸ் இளைய மகன் போட்டியா?.. பணத்தை வாரி வழங்குவதால் கட்சித் தலைமை விசாரணை
சென்னை: திருவாடானை தொகுதியில் ஓபிஎஸ் மகன் தொடர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று பணத்தை வாரி வழங்கி வருவதால், அவர் அந்த தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கட்சித் தலைமைக்கு புகார்கள் சென்றுள்ளன. இதனால் கட்சித் தலைமை விசாரணையை தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் ஓ.பன்னீர்செல்வம். எதிர்க்கட்சித் துணை தலைவராகவும் உள்ளார். இவரது மூத்த மகன் ரவீந்திரநாத். தேனி மக்களவை தொகுதி எம்பியாக உள்ளார். அவர் ஒருவர்தான் மக்களவை என்பதால், மக்களவை கட்சித் தலைவராகவே அவரை கட்சித் தலைமை…








