ஜி.கே.வாசன் வலியுறுத்தல் பாலியல் தொல்லை அளிப்பவர்களை தூக்கிலிட வேண்டும்

சென்னை: தமாகா சார்பில் மே தின விழா, சென்னை சேப்பாக்கத்தில் கொண்டாடப்பட்டது. மாநில துணை தலைவர் விடியல் சேகர் தலைமை வகித்தார். தொழிற்சங்க பொது செயலாளர் கே.ஜி.ஆர். மூர்த்தி வரவேற்றார். தொழிற்சங்க தலைவர் இளவரி தொடக்க உரையாற்றினார். விழாவில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டு பேசியதாவது:  சமீபகாலமாக பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் நடப்பது அதிகரித்து வருகிறது. அவ்வாறு பாலியல் தொல்லை கொடுப்பவர்களிடம் விசாரணை என்ற பெயரில் வழக்கை நீட்டிக்கக்கூடாது. இவர்தான் குற்றவாளி என முதல் நிலையில் அறிந்த…

முதுமைக்கேற்ற டானிக் உடற்பயிற்சியே! | முதுமை எனும் பூங்காற்று

சுமார் 70 வயதுள்ள ஒரு நபர் எனது கிளினிக்கிற்கு வந்தார். அவர் “எனக்கு உடலில் எந்தத் தொந்தரவும் கிடையாது, இது வரையிலும் எந்த மாத்திரையும் சாப்பிட்டது கிடையாது. ஆனால், நான் சற்று பலவீனமாக இருப்பதாக எண்ணுகிறேன். என் வயதிற்கேற்ற நல்ல டானிக் ஒன்றை எழுதிக் கொடுங்கள்” என்றார். அவரை முழுமையாகப் பரிசோதித்ததில் அவருக்குத் தெரியாமல் உடலில் சில பிரச்னைகள் இருந்ததைக் கண்டேன். அவருடைய எடையும் சற்று அதிகமாக இருந்தது. நான் எனது மருந்துச் சீட்டில் ஒன்றை மட்டும்…

தென்னிந்திய பள்ளிகள் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக ஜான் அமலன் தேர்வு

John Amalan | தென்னிந்திய பள்ளிகள் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் இந்திய பள்ளிகள் கிரிக்கெட் சங்க கூட்டமைப்பின் தேசிய அமைப்பு செயலாளராகவும் G.ஜான் அமலன் பதவியேற்பு விழா ஜூன் 26, 2022 அன்று சென்னை ஐடிசி கிராண்ட் சோழாவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. நன்றி

311 லிட்டர், 5 அடி உயரம், 1.3 மில்லியன் டாலரைத் தாண்டும் விலை – உலகின் மிகப்பெரிய மது பாட்டில்! | This world’s largest bottle of Whiskey is all set to be auctioned in UK

ஸ்காட்லாந்தில் உள்ள ‘Fah Mai Holdings Group Inc. & Rosewin Holdings PLC’ என்ற நிறுவனம் கடந்த 2021-ல் உலகின் மிகப்பெரிய மது பாட்டிலைத் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தது. 5 அடி 11 இன்ச் உயரம், 311 லிட்டர் வரை கொள் அளவு கொண்ட இந்த பாட்டில் வழக்கமான அளவு கொண்ட 444 விஸ்கி பாட்டிலின் எண்ணிக்கைக்குச் சமம் என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 32 வருடங்கள் பழைமையான பிரபல ‘தி மெக்கேலான் (The Macallan)’…

“உலகை வரவேற்கத் தயாராக இருக்கிறோம்!”- சுற்றுலாப் பயணிகளை நெகிழ்ச்சியுடன் வரவேற்கும் நியூசிலாந்து | New Zealand opens its borders to 60 more countries

கோவிட் தொற்றின் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக மற்ற நாடுகளில் இருந்து வரும் சர்வதேச சுற்றுலா பயணிகளுக்கு நியூசிலாந்து அரசு தடை விதித்திருந்தது. இந்த நிலையில் இதற்கான தடை இப்போது அகற்றப்பட்டதால் இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஏராளமான சர்வதேச சுற்றுலாப் பயணிகள் நியூசிலாந்துக்கு வருகை தருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பல நாடுகளிருந்து வரும் தங்கள் உறவினர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை நியூசிலாந்து மக்கள் இனிப்புகள் கொடுத்து நெகிழ்ச்சியுடன் விமான நிலையத்தில் வரவேற்று வருகின்றனர்.…

தொடர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பு திருவாடானை தொகுதியில் ஓபிஎஸ் இளைய மகன் போட்டியா? பணத்தை வாரி வழங்குவதால் கட்சித்தலைமை விசாரணை

சென்னை: திருவாடானை தொகுதியில் ஓபிஎஸ் இளைய மகன் தொடர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்க பணத்தை வாரி வழங்கி வருவதால், அவர் அந்த தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கட்சித் தலைமைக்கு புகார்கள் சென்றுள்ளன. இதனால் கட்சித் தலைமை விசாரணையை தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் ஓ.பன்னீர்செல்வம். எதிர்க்கட்சித் துணை தலைவராகவும் உள்ளார். இவரது மூத்த மகன் ரவீந்திரநாத். தேனி மக்களவை தொகுதி எம்பியாக உள்ளார். அவர் ஒருவர்தான் மக்களவை உறுப்பினர் என்பதால், மக்களவை கட்சித் தலைவராகவே அவரை…

"கொரோனா காலங்களில் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டது" – பில் கேட்ஸ் புகழாரம்

உலகப் பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் அண்மையில் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் கோவிட் பெருந்தொற்று குறித்துப் பேசியிருந்தார். அதில் உலககெங்கிலும் உள்ள நாடுகள் எவ்வாறு இந்தப் பெருந்தொற்று காலங்களைச் சமாளித்தது என்று கலந்துரையாடியிருந்தார். அதில் குறிப்பாக இந்தியா குறித்து பேசிய அவர் தொலைத்தொடர்புகளுக்கு அப்பால் பல கிராமங்களைக் கொண்ட இந்தியா, கோவிட் பெருந்தொற்றை சிறப்பாகக் கையாண்டது என்றும் ஆதார் போன்ற டிஜிட்டல் காரணிகளைப் பயன்படுத்தி மக்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை கொண்டு சேர்த்தது பாராட்டுக்குரியது என்றும் கூறினார்.…

“நீரஜ் சோப்ரா பிறந்த ஊரில் ரூ.10 கோடிக்கு மைதானம் அமைக்கப்படும்!”- ஹரியானா மாநில முதல்வர் அறிவிப்பு | Neeraj Chopra to get stadium in his name at his native village in Haryana

“நீரஜ் சோப்ரா பிறந்த ஊரில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான விளையாட்டு மைதானம் அமைக்கப்படும். ஹரியானா, விளையாட்டுக்கு பிரதான மையமாக மாறி வருகிறது. நமது வீரர்கள் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் விருதுகளை வென்று வருகிறார்கள். ஹரியானா – வீரர்களுக்கு அதிகமான பரிசு தொகை கொடுக்கிற மாநிலங்களில் ஒன்று” என பானிபட்டில் அமைக்கப்பட்டிருக்கும் சர்க்கரை ஆலையைத் திறந்து வைத்து பேசும் போது ஹரியானா முதல்வர் தெரிவித்து இருக்கிறார்.நீரஜ் சோப்ராஹரியானா அரசு ஒருங்கிணைக்கும் கேலோ இந்தியா யூத் விளையாட்டு…

தலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் – காராமணி வடை | Kaaramani Vadai

Last Updated : 29 Mar, 2020 09:49 AM Published : 29 Mar 2020 09:49 AM Last Updated : 29 Mar 2020 09:49 AM தொகுப்பு: தமிழ் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளத் தனித்திருப்பதும் ஆரோக்கிய உணவைச் சாப்பிடுவதும் அவசியம். பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் இந்த வைரஸ் தொற்று ஏற்படக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். சில நாட்களுக்கு வீட்டிலேயே இருப்பது…

சாதிக் கயிறு விவகாரத்தில் மாணவர் கொலை: சிக்கலைத் தீர்க்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது?

பிரபுராவ் ஆனந்தன்பிபிசி தமிழுக்காகஒரு மணி நேரத்துக்கு முன்னர்நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்த பள்ளக்கால் பகுதியில், கையில் சாதிக் கயிறு கட்டும் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் மாணவர் இறந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள விவகாரத்தில், கைது செய்யப்பட்ட 3 மாணவர்களும் மேஜர் அல்ல என்பதால் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் இரண்டு ஆசிரியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். இந்த விவகாரத்தில் இன்று திங்கள்கிழமை பேசிய தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, எல்லோருக்கும் சமத்துவமான அரசாக தங்கள் அரசாங்கம்…