பாக். தாக்குதலில் உயிரிழந்த 3 கிரிக்கெட் வீரர்கள் – முத்தரப்பு போட்டியில் இருந்து ஆப்கன் விலகல் | Afghanistan pull out of tri-series involving Pakistan after killing of Afghan players in Paktika

காபூல்: பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஆப்கனிஸ்தானை சேர்ந்த மூன்று கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பங்கேற்கும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக ஆப்கனிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. பாகிஸ்​தானில் செயல்​படும் தெக்​ரிக் இ-தலி​பான்​களுக்கு (டிடிபி) ஆப்​கானிஸ்​தான் அடைக்​கலம் கொடுப்பதாகக் குற்றம் சாட்டி வரும் பாகிஸ்தான், ஆப்கனில் உள்ள தெக்​ரிக் இ தலி​பான்​களை குறிவைத்து கடந்த வாரம் ராணுவ தாக்குதல் நடத்தியது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ஆப்கனிஸ்தான், பதில் தாக்குதலை…

Deepavali: அதிரசத்தோட ரூல் புக் படிச்சிருக்கீங்களா? இது அதிரசத்தோட Nostalgia பகிர்வு

அதிரசம்… பேர் என்னவோ இனிப்பு பலகாரம்தாங்க. ஆனா, இது வாங்குற வேலையிருக்கே… அப்பப்பா..! இன்னிக்கு ஆர்டர் போட்டா இனிக்க இனிக்க வீடு தேடி வந்திடுது அதிரசம். ஆனா, கால் நூற்றாண்டுக்கு முன்னாடி வரைக்கும் தீபாவளிக்கு அதிரசம் சுடுறதுங்கிறது மிகப்பெரிய டாஸ்க். சென்ற தலைமுறையினர் அதிரசம் செய்ய பட்டபாடுகளையாவது நாம தெரிஞ்சுக்கலாமா..? அதிரசம்அதிரசத்தோட ரூல் புக்..!முதல்ல அதிரசத்தோட ரூல் புக்கை படிச்சிடுவோம். இளம் பிரவுன் நிறத்துலதான் இருக்கணும். ஒரு செகண்டு அதிகமா வெந்துட்டாலும் தீய்ஞ்ச நிறம் வந்துடும்.கையில எடுத்தா…

வீரப்பன் யானை வேட்டையை கைவிட்டு சந்தனமரங்களை கடத்த தொடங்கியது ஏன்? முழு பின்னணி

கட்டுரை தகவல்எழுதியவர், பெ.சிவசுப்பிரமணியன்பதவி, பிபிசி தமிழுக்காக18 அக்டோபர் 2025, 08:14 GMTபுதுப்பிக்கப்பட்டது 25 நிமிடங்களுக்கு முன்னர்சந்தனக் கடத்தல் வீரப்பன் கொல்லப்பட்டு இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. தமிழகக் காட்டிலிருந்து தப்பி, இலங்கைக்குச் செல்ல முயன்றவரை, தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர் விஜயகுமார் தலைமையிலான அதிரடிப்படை 2004 அக்டோபர் 18-ஆம் தேதி சுட்டுக்கொன்றதாக அறிவிக்கப்பட்டது.1978-ஆம் ஆண்டு முதல் 2004-ஆம் ஆண்டில் வீரப்பன் இறக்கும் வரையிலும் அவர் மீது தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய இரு மாநில காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட…

பொதுமக்களின் உள்கட்டமைப்பை குறிவைப்பது காட்டுமிராண்டித்தனமானது – பாகிஸ்தான் தாக்குதல் குறித்து ஆப்கான் வீரர் ரஷித் கான் வருத்தம் | Rashid Khan speech on Pakistan attack Kill 3 Afghan Cricketers

கடந்த ஒரு வாரமாக, பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையே மோதல்களும், தாக்குதல்களும் நடந்து வருகின்றன.இதனால் இரு நாடுகளுக்கிடையே பெரும் போர் நடக்கக்கூடும் அபாயம் இருப்பதால், 48 மணி நேரம் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது. அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த இரு நாடுகளும் முன்வர வேண்டும் எனக் கத்தார் நாடு அழைப்பு விடுத்திருந்தது.ஆனால் இந்தப் போர் நிறுத்தத்தை மீறி, ஆப்கானிஸ்தானில் 3 இடங்களில் வான்வழித் தாக்குதல் நடத்தியிருக்கிறது பாகிஸ்தான். இந்தத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்திருக்கின்றனர், 12 பேர்…

உடல் எடையைக் குறைக்க சித்த மருத்துவத்தில் மருந்துகள் உண்டா? | Do Siddha medicines help in rapid weight reduction?

சித்த மருத்துவத்திலும் அதற்கு நிறைய தீர்வுகள் உள்ளன. உதாரணத்துக்கு, திரிபலா சூரணம். ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கவும், கொழுப்பு அதிகரிக்காமல் இருக்கவும் திரிபலா பயன்தரும். அதேபோல நத்தைச்சூரி சூரணம் என்றொரு மருந்து இருக்கிறது. இதயத்தின் செயல்பாடுகளைச் சிறப்பாக்கும் மருதம்பட்டைச் சூரணம்,  வெண் தாமரை சூரணம்  போன்ற மருந்துகளையும், சித்த மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துக்கொள்ளலாம். திரிபலா பொடிபுடலங்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய், முள்ளங்கி போன்ற நீர்க்காய்கறிகளை நிறைய எடுத்துக்கொள்ளலாம்.குறிப்பாக, மதிய உணவுக்கு புரோபயாடிக் சத்து நிறைந்த பானகம், பழைய சாத நீர், மோர் போன்றவற்றையும் அதிகம் சேர்த்துக்கொள்வது…

ஐசிசி விருதை வென்ற அபிஷேக் சர்மா, ஸ்மிருதி மந்தனா | Abhishek Sharma smriti Mandhana win ICC award

துபாய்: செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருதை இந்தியாவின் அபிஷேக் சர்மா, ஸ்மிருதி மந்தனா வென்றுள்ளனர். ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளை கவுரவிக்கும் விதமாக ஐசிசி சார்பில் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர், வீராங்கனை விருதினை இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மா, ஸ்மிருதி மந்தனா வென்றுள்ளனர். ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் அபாரமாக விளையாடிய அபிஷேக் சர்மா, 7 ஆட்டங்களில் 314…

இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால் சாமானிய மக்களுக்கு என்ன பாதிப்பு?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ் பதவி, பிபிசி17 அக்டோபர் 2025, 14:11 GMTபுதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்ஆகஸ்ட் மாதத்தில், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கியதற்காக இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரிகளை விதித்தது. புதன்கிழமை, “ரஷ்ய எண்ணெய் வாங்குவதை விரைவில் நிறுத்துவதாக” இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தனிப்பட்ட முறையில் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.அடுத்த நாள், ரஷ்யா எச்சரிக்கையுடன் பதிலளித்தது. இந்தியாவோ டிரம்ப் கூறிய கருத்துகளில் இருந்து…

‘2027 உலகக் கோப்பையில் ரோஹித்தும், கோலியும் விளையாடுவார்கள்’ – டிராவிஸ் ஹெட் எதிர்பார்ப்பு | travis head expects rohit virat to play 2027 odi world cup

சிட்னி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்களான ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் எதிர்வரும் 2027 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவார்கள் என எதிர்பார்ப்பதாக ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்த சூழலில் செய்தியாளர்களை சந்தித்த ஆஸ்திரேலிய வீரர்…

நெல்லை: வெளுத்து வாங்கும் கனமழை – சாலைகள் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்! | Album

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், நெல்லை மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் தொடர் கனமழையால் சாலைகள் மற்றும் நீர் நீர்நிலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. நெல்லை மாவட்ட அணைகளிலும் நீர்வரத்து அதிகரித்து வருகின்றது.Published:Today at 9 PMUpdated:Today at 9 PM Source link

Test Twenty – கிரிக்கெட்டில் அறிமுகமாகும் புதிய ஃபார்மட்! | ‘Test Twenty’ Format Combines the Strategy of Tests with the Thrill of T20s

லெஜண்ட்ஸ் சொன்னதென்ன?இது பாரம்பரிய கிரிக்கெட்டை கௌரவிப்பதுடன், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார் ஏபி டிவில்லியர்ஸ். இது விளையாட்டின் கலையையும் தாளத்தையும் மீட்டுருவாக்கம் செய்யும் அதே வேளையில் நவீன உற்சாகத்தைக் கொண்டிருக்கிறது என சர் கிளைவ் லாயிட் கூறியுள்ளார்.”கிரிக்கெட்டுக்கு புதிய இதயத்துடிப்பு தேவை – இன்றைய இளைஞர்களை விளையாட்டின் அசல் உணர்வோடு இணைக்கும் ஒன்று. டெஸ்ட் 20 அதைத்தான் செய்கிறது.” எனக் கூறியுள்ளார் ஹர்பஜன் சிங். நன்றி